Friday 7 June 2013

அகவை 58 காணும் தமிழீழ தேசிய தலைவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.






தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!




தமிழர் நாம் இத்தரணியில் 


தலை நிமிர்ந்து வாழ 


தன் உயிரை துச்சமென எண்ணி


தாய் மண்ணைக் காக்க வந்த 


தலைமகனே வீரத்தமிழனே !..

 

'மாவீரர் நாள்' உரை 2008






தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

நவம்பர் 27, 2008.



எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்-தேசிய தலைவர்

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 14.12.2006 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.







தலைமைச்செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்

2006-12-14

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற ஒரு புரட்சிகரத் தலைவரைப்பற்றி – இராணுவ மேதையைப் பற்றி எழுதுவது என்பது ஒரு சுலபமான விடயமல்ல. முதன்மையான சாதனைகள் பலவற்றை ஈட்டியவர் என்ற அளவில், அவற்றோடு தொடர்புடைய மற்றவற்றைத் தொடாமல் ஒன்றையோ இரண்டையோ மட்டும் வலிறுயுத்திக் கூறமுனைவது ஓரளவுக்குக் கடினமான முயற்சியேயாகும்.

தமிழினத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தமிழீழ தேசிய தலைவர்.


10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப்பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான். தலைவர் பிரபாகரனைக் கொன்றுவிட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதி கட்டவேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்.

தலைவர் பிரபாகரனின் "போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்



இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்.





இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத - புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை.